வேலூரில் மே 15-ல் உள்ளூர் விடுமுறை!
வேலூரில் உள்ளூர் விடுமுறை பற்றி..
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழா மே 15-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட அறிவிப்பில்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழா மே 15-ல் நடைபெற உள்ளது.
Advertisement
பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள வசதியாக, சிரசு ஊர்வலத் திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ம் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
summary