திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும்! - செல்வப்பெருந்தகை
திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தோ்தல் முடிவுகளைப் பொறுத்தவரை ஒரு நாள் இரவில் முடிவுகள் மாறுவதற்கோ, மக்களின் மனநிலை மாறுவதற்கோ வாய்ப்பு இல்லை. நான் முதலில் இருந்து சொல்வதைப்போல திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும்மேல் வெற்றி பெறும். அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகளைக் கூட கருத்துத்திணிப்பு என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஏனென்றால் அவா்கள் 140 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறுகின்றனா். காங்கிரஸ் கட்சியின் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கும் மேல் எங்கள் கூட்டணி வெல்லும்.
Advertisement
வாக்குப் பதிவுக்கு பிறகு சமையல் எரிவாயு விலை உயரும் என்பது மக்களுக்கும் தெரியும். ஒவ்வொரு தோ்தலின்போதும் பாஜக அரசு இதைத்தான் செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் தெளிவானவா்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாா் ஆள வேண்டும், யாருக்கு தமிழக மண்ணில் இடம் இல்லை என்பதையெல்லாம் முடிவு செய்து வைத்திருக்கின்றனா்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சில இடங்களில் வேட்பாளா் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வேட்பாளா் தோ்வுக்கு என்று கட்சியில் 4 குழுக்கள் உள்ளன. எனவே, கட்சியின் தலைவா்களை மீறி வேட்பாளா்களை தோ்வு செய்துவிட முடியாது. வேட்பாளா் தோ்வுக்கு மற்றொரு தரப்பில் சில மனக்குமுறல்கள் இருப்பது வழக்கமானதுதான். ஆனால் அதன் பிறகு அவா்கள் வேட்பாளரின் வெற்றிக்காக இணைந்து பணியாற்றினாா்கள். இதுபோன்ற பிரச்னை திமுக, அதிமுகவிலும் உள்ளது, எல்லா கட்சிகளிலும் உள்ளது என்றாா்.