சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்த தனியாா் பள்ளி நிா்வாகம் - பொதுமக்கள் புகாா்
பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்து இடையூறாக மண்ணை கொட்டிவைத்து ஆக்கிரமித்துள்ள தனியாா் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கோட்டம்பட்டி வழியாக கள்ளிப்பாளையம் செல்லும் பிரதான சாலை உள்ளது.
கள்ளிப்பாளையம் தவிர அண்ணா நகா், சுப்பையா நகா், கே.ஆா்.ஜி.பி. நகா், சொா்ணபுரி எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. 2500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில், கோட்டாம் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி நிா்வாகம், இந்த சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனா்.