கோவில்பாளையத்தில் திமுகவினர் சாலை மறியல்
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவில்பாளையத்தில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவில்பாளையத்தில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையன், மாவட்டப் பொருளாளர் மணி (எ) விஜயகுமார், ஒன்றியப் பொருளாளர் ராசு (எ) பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.ஆர்.ராஜன், பார்த்திபன், ஜீவா, மகளிர்அணி சார்பில் ரதி மனோகர், காங்கிரஸ் கட்சி சார்பில் நாகராஜ், மதிமுக சார்பில் பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.