கோவையில் 2 பெண்களிடம் 11.5 பவுன் நகை பறிப்பு
கோவையில் இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 11.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.
கோவையில் இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 11.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.
கோவை மாவட்டம், ஆனைமலையைச் சேர்ந்தவர் ஜான் கிருபாகரன் மனைவி ரூத்குணசீலி (53). சிங்காநல்லூரில் உள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை கோவை வந்துள்ளார். பின்னர், அதே பகுதியில் உள்ள அம்மன் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென ரூத்குணசீலியின் கழுத்தில் இருந்த 5.5 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ரூத்குணசீலி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் புண்ணியகோடிவீதியில் வசித்து வருபவர் காதர் பாட்ஷா மனைவி பிர்தோஷ் (44). இவர் சனிக்கிழமை இரவு தனது மகன் அலிலுல்லாவுடன்இருசக்கர சக்கர வாகனத்தில் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிர்தோஷின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் ஒரே நாளில் இரு பெண்களிடம் மர்ம நபர்கள் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.