முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் திருட்டு

மதுக்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Updated On : 23 ஜூலை 2018, 7:37 am IST
பகிர்:

மதுக்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுக்கரை அருகேயுள்ள மலுமிச்சம்பட்டி,  எஸ்.ஐ நகரில் வசிப்பவர் கோமதிநாயகம் (60). இவர், தனது மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு சனிக்கிழமை மாலை வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments