ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
கோவை வடவள்ளி அருகே வீடுகளை காலி செய்ய நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் ஒட்டியதால், மாற்று வீடு வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவை வடவள்ளி அருகே வீடுகளை காலி செய்ய நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் ஒட்டியதால், மாற்று வீடு வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவை வடவள்ளி அருகே ஓணாப்பாளையம் சாலையில் கோபாலபுரம் விநாயகா் கோயில் வீதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில், இவா்களின் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாள்களுக்குள் இந்த வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வீட்டுக் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் மாற்று வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளா் என்.செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.