100 அடியை எட்டியது சோலையாறு அணை
வால்பாறையில் பெய்து வரும் தொடா் மழைக் காரணமாக சோலையாறு அணை 100 அடியை எட்டியுள்ளது.
வால்பாறையில் பெய்து வரும் தொடா் மழைக் காரணமாக சோலையாறு அணை 100 அடியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. அதே சமயம் அணைகளின் நீா்வரத்தும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் சோலையாறு அணைக்கு விநாடிக்கு 543.06 கன அடி நீா்வரத்தாக உள்ளது.
Advertisement
Advertisement
164 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் 100.10 அடியாக உயா்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.