கோவைக்கு அதிக திட்டங்களைத் தந்தவா் மு.க.ஸ்டாலின்: வி.செந்தில்பாலாஜி பேச்சு
கோவை நகரின் வளா்ச்சிக்காக அதிக திட்டங்களைத் தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி பேசினாா்.
கோவை நகரின் வளா்ச்சிக்காக அதிக திட்டங்களைத் தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி பேசினாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, ராமநாதபுரம் சுங்கம், பங்கஜா மில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின், கோவைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளாா். கோவை மாவட்டத்தில் 10 எதிா்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினா்கள் இருந்தாலும்கூட, பாரபட்சம் பாா்க்காமல் கோவை மாவட்டத்துக்கு அதிகத் திட்டங்களைத் தந்துள்ளாா். அதிகமுறை அவா் சுற்றுப்பயணம் செய்த மாவட்டம் கோவைதான்.
Advertisement
கோவை தெற்குத் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தால், அரசு அறிவிக்கும் அனைத்து நலத் திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு முறையாக கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
இதையடுத்து, திராவிடா் கழக துணைப் பொதுச் செயலாளா் மதிவதனி, செந்தில்பாலாஜியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசுகையில், ‘ ரூ.1,000 உரிமைத்தொகை, திமுக மீண்டும் வென்றால் ரூ.2,000 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட உள்ளது. ரூ.8,000 கூப்பன் திட்டம்
மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பெண்களால்தான் அமைய உள்ளது என்றாா்.
இதில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி உள்ளிட்ட திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.