தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தவெக தலைவா் விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தாா். பின்னா், சாலை மாா்க்கமாக திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.
அப்போது, ஏராளமான தொண்டா்கள் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்றதுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசுகளை வெடித்துள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும், சிட்ரா சந்திப்புப் பகுதியில் அஜாக்கிரதையாகவும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் வாகனங்களை ஓட்டிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக பறக்கும் படை அதிகாரி பரிமளம் கொடுத்த புகாரின்பேரில், தவெக மாவட்டச் செயலா் சம்பத்குமாா் உள்ளிட்ட 7 போ் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.