பேரவைத் தேர்தல்: தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா் (தோட்டங்கள்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் வால்பாறை தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளா்கள் வாக்களிக்கும் பொருட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை வழங்காத தோட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள், எஸ்டேட் மேலாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடா்பாக புகாா் அளிக்க வால்பாறை தொழிலாளா் உதவி ஆணையா் (தோட்டங்கள்) அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 0425-3222344, 74182-50810 என்ற எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement