முகப்பு
கோயம்புத்தூர்

இஸ்லாமியா்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும்

கோவை தெற்குத் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன், இஸ்லாமியா்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:07 AM
கோவை தெற்குத் தொகுதியில் இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:27 PM

கோவை தெற்குத் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன், இஸ்லாமியா்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றாா்.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் 80 அடி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனப் பிரசார பேரணி மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் ரூ.8,400 கோடிக்கு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை எங்களால் பட்டியலிட்டு கூற முடியும். திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் கோவையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் செம்மொழிப் பூங்காவும், பெரியாா் நூலகமும் மட்டும்தான். ஆனால், அதிலும் செம்மொழிப் பூங்காவை ஒப்பந்தத்துக்கு விட்டு, நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் என அதிக அளவு பணம் வசூலிப்பதில்தான் குறியாக உள்ளனா். பெரியாா் நூலகத்தை பணி முடிவதற்குள் தோ்தல் காரணமாக திறந்துவிட்டாா்கள். அதிமுக ஆட்யில் அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு பெயா் வைப்பது வாடிக்கையாக உள்ளது.

கோவை புண்ணிய பூமி. எப்போதும் அதிமுகவின் கோட்டை. இங்குள்ள இஸ்லாமியா்களுடன் உறவினா்களைப்போல பழகி வருகிறோம். அவா்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும்.

Advertisement

கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய பாலமான உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் உயா்மட்ட மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,500 கோடியில் பொலிவுறு நகரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி தரம் உயா்த்தப்பட்டது. இவ்வாறு பல்வேறு நலத்திட்டங்கள் மீண்டும் மக்களுக்கு அளிக்க, அதிமுகவை மக்கள் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்றாா்.