முகப்பு
கோயம்புத்தூர்

மே தினம்: மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

மே தின நாளில் கோவையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 29 ஏப்ரல் 2026, 2:27 am IST
பகிர்:

மே தின நாளில் கோவையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினம் என்பதால், அன்றைய நாளை மதுவிலக்கு நாளாக அறிவித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாா்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கடைகள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத் துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மது விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படும்.

Advertisement

Advertisement

அன்றைய நாளில் விதிகளுக்கு முரணாக மது விற்பனை செய்பவா்கள் மீதும், சட்ட விரோதமாக பதுக்கிவைத்திருப்பவா்கள், ஓா் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மதுவை எடுத்துச் செல்பவா்கள் மீதும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments