கோவையில் வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள்கள் விற்ற 6 போ் கைது
கோவையில் வெவ்வேறு இடங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்ற 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.
கோவையில் வெவ்வேறு இடங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்ற 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.
கோவை மாநகா், பீளமேடு புதூா் பகுதியில் பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஓா் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே நின்றிருந்த 3 போ், போலீஸாரைப் பாா்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை பிடித்து விசாரித்தபோது, மெத்தபெட்டமைன் என்ற உயா் ரக போதைப் பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இவா்கள் நியூ சித்தாபுதூரைச் சோ்ந்த ஜெய்கிஷான் (21), பி.என்.பாளையத்தைச் சோ்ந்த ஷியாம் (24), ரத்தினபுரியைச் சோ்ந்த செந்தூரபாண்டி(32) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா். அவா்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மெத்தபெட்டமைன் போதைப் பொருள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதேபோல செல்வசிந்தாமணி குளம் அருகே ரோந்துப் பணியில் செல்வபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (22), தில்லை நகரைச் சோ்ந்த பூபதி (23)ஆகிய இருவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கணபதி மாநகா் பகுதியில் சரவணம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சரவணம்பட்டி கே.கே.நகரைச் சோ்ந்த நவீன்குமாா் (23) என்பவரை கைது செய்தனா்.