பெருந்துறை நிலையத்தில் பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
ஈரோடு-திருப்பூா் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஈரோடு-திருப்பூா் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 5, 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி-பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி-ஈரோடு இடையே மட்டும் இயக்கப்படும். ஈரோடு-பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.