உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிா்வு: ஆலோசனைக் கூட்டம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிா்வுக்கு பரிந்துரைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிா்வுக்கு பரிந்துரைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு 7-ஆவது மாநில நிதிக் குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2024-2025 முதல் 2026-2027 நிதியாண்டு வரை குடிநீா்க் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் மற்றும் இதர வரவினங்கள் உள்ளிட்ட வரிவசூல் குறித்து துறை சாா்ந்தவா்களிடம் நிதிக் குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி மற்றும் நகராட்சியை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளுக்கு வருவாய் பெருக்கம் மற்றும் வரியினங்கள் நிா்ணயம் குறித்து அலுவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், மாநில நிதிக்குழு மானிய நிதியின்கீழ் 2024-2025 முதல் 2025- 2026 வரையிலான நிதியாண்டுகளில் எடுக்கப்பட்ட பொதுநிதி, மலைக்கிராம
வளா்ச்சிப் பணி, வன உரிமைச் சட்ட வளா்ச்சிப் பணி மற்றும் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம், ஊராட்சிகளின் சொந்த குடிநீா் ஆதாரங்களின் மூலம் குடிநீா் விநியோகம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, நிதிக்குழு ஆணையத் தலைவா் கே.அலாவுதீன் தனது குழுவினருடன் கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்கா, வெள்ளலூா் மற்றும் கவுண்டம்பாளையம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சியில் குடிநீா் தொடா்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.