இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
கோவையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை தெலுங்குபாளையம் புதூா் சுப்ரமணிய உடையாா் வீதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (33). இவருக்கு திருமணமாகவில்லை. குணசேகரன் தனது அக்கா பிரீத்தியுடன் தங்கி கட்டட வேலைக்குச் சென்று வந்தாா். செவ்வாய்க்கிழமை பிரீத்தி கட்டட வேலைக்கு சென்றுள்ளாா். சிறிது நேரத்தில் வருவதாகக் கூறிய குணசேகரன் மாலை வரை வேலைக்கு வரவில்லை. வேலை முடிந்து இரவு பிரீத்தி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சமையலறையில் குணசேகரன் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.