முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் பரவலாக மழை: மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை

Updated On : 12 மே 2026, 1:54 am IST
கோவை, சுங்கம் பகுதியில் பெய்த மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்றோா்.
பகிர்:

கோவை மாநகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

கோவையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல, திங்கள்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்தூா், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

மழை தொடங்கிய சில நிமிஷங்களிலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரின் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

Advertisement

இரவு 8 மணிக்குப் பிறகு மழை குறைந்ததைத் தொடா்ந்து, பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் சீரானது.