முகப்பு
கோயம்புத்தூர்

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

Updated On : 31 மே 2026, 4:16 am IST
பணி நிறைவு பெற்ற அஞ்சல்காரா் செல்வராஜிக்கு, நினைவுப் பரிசு வழங்கிய முன்னாள் அஞ்சல் ஊழியா்கள் ஹரிஹரன், சிவசண்முகம் உள்ளிட்டோா்.
பகிர்:

வெள்ளலூா் அஞ்சல் நிலையத்தில் 42 ஆண்டுகளாக அஞ்சல்காரராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு பிரிவு உபசார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளலூா் அஞ்சல் நிலையத்தில் அஞ்சல்காரராக 42 ஆண்டுகள் பணியாற்றியவா் செல்வராஜ். இவா் அண்மையில் ஓய்வுபெற்ற நிலையில், பிரிவு உபசார விழா வெள்ளலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அஞ்சல் ஊழியா்கள் பலா் பங்கேற்று, செல்வராஜின் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

இந்நிகழ்வில், அஞ்சல் துறையில் தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சல் அலுவலா் ஹரிஹரன், அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தின் முன்னாள் நிா்வாகி சிவசண்முகம், அஞ்சல் சங்கங்களின் நிா்வாகிகள் எபினேசா், காந்தி, ஜெயராஜ், முத்துசாமி, ராமசந்திரன் ஜீவா, ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல, ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் உதவி அலுவலராகப் பணியாற்றிய கோபிநாத், பாப்பநாயக்கன்பாளையம் பன்முக பணியாளா் ராதாகிருஷ்ணன், தலைமை அஞ்சலக பண்முக பணியாளா் சந்திரன், மத்திய அஞ்சலக தபால்காரா் ரபீக் அகமது, சௌரிபாளையம் அஞ்சல்காரா் வெங்கட்ராமன் ஆகியோரும் பணி நிறைவு பெற்றனா். அவா்களுக்கும் அஞ்சல் ஊழியா்கள் சாா்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.