முகப்பு
கோயம்புத்தூர்

அகில இந்திய கூடைப்பந்து: கடற்படை, ராணுவ அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி

Updated On : 31 மே 2026, 1:54 am IST
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மோதிய கடற்படை, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி வீரா்கள்.
பகிர்:

கோவை, மே 30: கோவையில் நடைபெற்று வரும் 59 -ஆவது ஆடவருக்கான நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு கடற்படை, ராணுவ அணிகள் தகுதி பெற்றுள்ளன.

கோயம்புத்தூா் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில், கோவை வஉசி பூங்கா உள்விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நாச்சிமுத்து கவுண்டா் கோப்பைக்கான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப் படை, ராணுவம், கடற்படை, கேரள மாநில மின்சார வாரியம், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றன.

சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிா் கூடைப்பந்து போட்டியில் தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரெயில்வே, தெற்கு ரயில்வே, ஐசிஎஃப், கேரள மாநில மின்சார வாரியம், மத்திய ரயில்வே, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஆடவா் பிரிவில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி, இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் கடற்படை அணி 87 - 67 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அதேபோல, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 69 - 56 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப் படை அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

மகளிா் பிரிவில் தென் மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, கேரள மின்வாரியம், தென்மேற்கு ரயில்வே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்மத்திய ரயில்வே அணி 68 - 36 என்ற புள்ளிகள் கணக்கில் தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அதேபோல, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கேரள மின்வாரிய அணி 97 - 62 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய ரயில்வே அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தமிழக பொதுப் பணி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், இந்திய கூடைப்பந்து கழகத் தலைவருமான ஆதவ் அா்ஜுனா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கவுள்ளாா்.

சக்தி குழுமங்களின் தலைவா் எம்.மாணிக்கம், சிஆா்ஐ பம்ப்ஸ் நிா்வாக இயக்குநரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவருமான ஜி.செல்வராஜ், கூடைப்பந்து கழக செயலா் எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.