முகப்பு
ஈரோடு

எம்.ஜி.ஆர். நினைவு தினம்

Updated On : 25 டிசம்பர் 2018, 5:52 am IST
பகிர்:

ஈரோட்டில்...
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகர் மாவட்ட செயலாளரும்,  மேற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.வி.இராமலிங்கம், கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு  ஆகியோர் தலைமை வகித்து எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு  மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
   இதில், முன்னாள்  மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி,  முன்னாள் மண்டலத் தலைவர் பெரியார் நகர் மனோகரன், பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, முருகுசேகர் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெருந்துறையில்...
பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில், எம்.ஜி.ஆரின் 31 ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. 
பெருந்துறை, குன்னத்தூர் நான்கு சாலை சந்திப்பு அருகில் எம்.ஜி.ஆரின் உருவப் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.  இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் சி.டி.ரவிசந்திரன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பரியசாமி, வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments