"கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கக்கூடாது'
பாதாளச் சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கக்கூடாது என்று மக்கள் நீதிமய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பாதாளச் சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கக்கூடாது என்று மக்கள் நீதிமய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இக்கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பவானிசாகர் சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளர் பூக்கடை ஏ. சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்துரு முன்னிலை வகித்தார். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி வரவேற்றார்.
கூட்டத்தில், சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயராஜா, நடராஜ், மகளிர் அணி புவனேஸ்வரி மற்றும் புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர், டி.என்.பாளையம், தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.