மாவட்ட தடகளப் போட்டி: சென்னிமலை கொங்கு பள்ளி முதலிடம்
மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டியில் சென்னிமலை, கொங்கு பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர்.
மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டியில் சென்னிமலை, கொங்கு பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஈரோடு மாவட்ட தடகளச் சங்கம் சார்பில், 17- ஆவது மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், மாவட்டத்திலுள்ள 60 பள்ளிகளைச் சேர்ந்த, 1,500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16,18 வயதுகளுக்கான பிரிவில், சென்னிமலை கொங்கு பள்ளி மாணவர்கள் 15 பேர் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர். இப்போட்டியில், முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள், சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ்குமார், தட்சிணாமூர்த்தி ஆகியோரை பள்ளித் தலைவர் ஆர்.கந்தசாமி, தாளாளர் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளர் என்.டி.ராஜேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் அசோக் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.