முகப்பு
ஈரோடு

கொங்கு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

எழுமாத்தூர் பகுதியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:15 am IST
பகிர்:

எழுமாத்தூர் பகுதியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்  நடைபெற்று வருகிறது. இதில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. 
எழுமாத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை அரசு மருத்துவர் மாரிமுத்து துவக்கிவைத்தார். எழுமாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர்கள் பொங்கியண்ணன், செந்தில்குமார், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது. மாலையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் பல்வேறு சுகாதாரப் பணிகளில் மாணவியர் ஈடுபட்டுவருகின்றனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சுரேஷ், அண்ணாதுரை, தியானேஸ்வரன், தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.