முகப்பு
ஈரோடு

சிவகிரியில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஆகஸ்ட் 2024, 1:00 am IST
பகிர்:

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42.33 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 416 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.140.89-க்கும், அதிகபட்சமாக ரூ.159.89-க்கும், சராசரியாக ரூ.148.69 -க்கும் விற்பனையானது. சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.101.49-க்கும், அதிகபட்சமாக ரூ.153.63-க்கும், சராசரியாக ரூ.138.99-க்கும் ஏலம்போனது.

Advertisement

Advertisement

மொத்தம் 30,935 கிலோ எடையுள்ள எள் ரூ. 42 லட்சத்து 33 ஆயிரத்து 832-க்கு விற்பனையானது.

மைலம்பாடியில்...

பவானி அருகேயுள்ள மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.34 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. 89 மூட்டை எள்ளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், வெள்ளை ரகம் கிலோ ரூ.90.09 முதல் ரூ.142.50 வரையும், கருப்பு ரகம் ரூ.150.69 முதல் ரூ.159.19 வரையும், சிவப்பு ரகம் ரூ.109.99 முதல் ரூ.141.49 வரையும் ஏலம்போனது. மொத்தம் 6,542 கிலோ எள் ரூ.9,34,832-க்கு விற்பனையானது. 15 மூட்டை தேங்காய் பருப்பு, கிலோ ரூ.73.89 முதல் ரூ.99.75 வரையில் ரூ.32,102-க்கு ஏலம்போனது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments