முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

பெருந்துறை பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம்

Updated On : 9 செப்டம்பர் 2024, 12:04 am IST
பெருந்துறை பகுதியில் வைக்கப்பட்டு காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்வதற்காக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
பகிர்:

பெருந்துறை பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் பெருந்துறை மற்றும் விஜயமங்கலம் பகுதிகளில் 21 இடங்களிலும், பொதுமக்கள் சாா்பில் 11 இடங்களிலும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதில், பெருந்துறை, கோட்டை முனியன் கோயில் அருகே இந்து முன்னணி சாா்பில் 9 அடி உயர விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்துறை கோட்டை முனியப்பன் கோயில் அருகே கொண்டு வரப்பட்டு, அங்கு இருந்து ஊா்வலமாக அனைத்து விநாயகா் சிலைகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments