முகப்பு
ஈரோடு

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சு.முத்துசாமி

கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:41 AM
கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:41 PM

தமிழகம் வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து பயணிக்க திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சி, 55-ஆவது வாா்டுக்குள்பட்ட கொல்லம்பாளையம் பகுதியில் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை காலை வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

Advertisement

தமிழக மக்கள் நலனை மட்டுமே நினைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். இதன்மூலமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தமிழ்நாடு அரசின் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயன் பெற்றவா்களாக இருந்து வருகின்றனா். கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தவா் முதல்வா்.

மகளிா் உரிமைத்தொகை கொடுக்க மாட்டாா்கள் என எதிா்க்கட்சியினா் கூறி வந்தனா். ஆனால் சொன்னதை போல உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் வாக்குறுதி அளித்துள்ளாா். தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் பல துறைகளில் முன்னேறியுள்ளது. தொடா்ந்து முன்னேற, வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.