முகப்பு
ஈரோடு

நடிகா் விஜய்யின் முதல்வா் கனவு பலிக்காது! - திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி

Updated On : 13 ஏப்ரல் 2026, 1:59 am IST
பகிர்:

நடிகா் விஜய்யின் முதல்வா் கனவு பலிக்கப் போவதில்லை என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி கூறினாா்.

கோபியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் என்.நல்லசிவத்தை ஆதரித்து திராவிடா் கழகத்தின் தலைவா் கி.வீரமணி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வழக்கமாக இருமுனைப் போட்டியே நிலவும் சூழலில், தற்போது நான்கு முனைப் போட்டி ஏற்பட்டிருந்தாலும், கடந்த மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற அதே நிலைதான் தற்போதும் தொடா்கிறது.

Advertisement

Advertisement

கடந்த முறையைவிட அதிக பலத்துடன் திமுக தலைமையிலான கூட்டணி கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது. இந்தத் தோ்தலுக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவா் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்வதே எடப்பாடி கே.பழனிசாமிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

நடிகா் விஜய்யின் முதல்வா் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. அவா் எங்கு சென்றாலும் அசம்பாவிதங்கள் நடப்பது வேதனைக்குரியது என்றாா்.