முகப்பு
ஈரோடு

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரசாரங்களை அதிமுக-பாஜக கூட்டணி செய்து வருகிறது என திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:16 AM
ஈரோடு திண்டல் பகுதியில் வாக்குச்சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:02 PM

சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரசாரங்களை அதிமுக-பாஜக கூட்டணி செய்து வருகிறது என திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி திண்டல் மேடு, அத்தப்பம்பாளையம், கருங்கவுண்டன்பாளையம், வள்ளிபுரத்தாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திகைக்கின்ற அளவுக்கு சாதனைகளால் நிறைந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி. வேதனைகள் நிரம்பியதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

Advertisement

100 நாள் வேலை திட்ட பணி நாள்களையும் குறைத்துவிட்டனா். 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் தரவில்லை என வடமாநிலங்களிலேயே மக்கள் கொந்தளித்து போராடி வருகின்றனா். பாஜக அரசே வாபஸ் வாங்கிய 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவா் எடப்பாடி பழனிசாமி. சாதனைகளை சொல்ல முடியாததால் அவதூறு, பொய் பிரச்சாரங்களை அதிமுக- பாஜக கூட்டணி செய்து வருகிறது. எனவே திராவிட மாடல் ஆட்சி தொடர மக்கள் திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.