கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்
கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியம் முழங்க திங்கள்கிழமை மாலை சீா்வரிசை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மூலவா் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சியுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதையடுத்து, மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாட்டு நடைபெற்றது.
திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்த பெண்களுக்கு மஞ்சள், குங்கும், மஞ்சள் கயிறு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன.
Advertisement