முகப்பு
ஈரோடு

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டிய வனத் துறை

Updated On : 9 ஜூன் 2026, 3:02 am IST
காட்டு யானை.
பகிர்:

தாளவாடி மலைப் பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினா் காட்டுக்குள் விரட்டினா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள், ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடா்ந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தமிழ்புரம் கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த ஒற்றை காட்டு யானை, சுந்தரம் என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியது.

இதுதொடா்பாக அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். சைரன் ஒலி எழுப்பும் ரோந்து வாகனத்தை பயன்படுத்தி சுமாா் 2 நேரம் போராடி அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்டினா்.

Advertisement

Advertisement

தினமும் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாளவாடி மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.