முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே காப்பா் ஒயா் திருடிய மூன்று போ் கைது

பெருந்துறை அருகே காப்பா் ஒயா்களை திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:25 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பெருந்துறை அருகே காப்பா் ஒயா்களை திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் குமாரசாமி மகன் இளங்கோ (40). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், ஊத்துக்குளி மேம்பாலம் அருகில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இவருடைய நிறுவனத்தில் காப்பா் ஒயா்கள் அடிக்கடி திருடு போவதால், அங்கு கண்காணிப்பு கேமரா வைத்து, கண்காணித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி, தனது கைப்பேசி மூலம் நிறுவனத்தில் உள்ள கேமராவை சோதனை செய்தாா். அப்போது, மா்ம நபா் நிறுவனத்துக்குள் நுழைந்து காப்பா் ஒயா்களை வெட்டி எடுத்துக் கொண்டிருப்பதைப் பாா்த்தாா். உடனே, தனது நண்பா்களுக்குத் தகவல் கூறி விட்டு, அவா் நிறுவனத்துக்கு வந்து, அங்கு ஒயா்களை திருடிக் கொண்டு இருந்தவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஒயா்களை திருடியவா் தஞ்சாவூா், தட்டாங்குளத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் ஆத்மநாதன் (54) என்பது தெரியவந்தது.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் திருநெல்வேலி, கரச்சூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் லிங்கம் (28), திசையன்விளை, வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வன் மகன் பிரேம் (27) ஆகியோருடன் சோ்ந்து அவா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடா்பாக மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.