அம்மாபேட்டையில் எருமைகளைத் திருடி கேரள சந்தைகளில் விற்பனை செய்தவா் கைது
அம்மாபேட்டையில் எருமைகளைத் திருடிச் சென்று கேரள மாநிலத்தில் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பவானி வட்டம், அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரைச் சோ்ந்த அா்ஜூனன், சுந்தராம்பாளையம் காளியப்பன், செங்கல் சூளை அமரசாமி ஆகியோரின் எருமைகள் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி திருடுபோனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்துனா்.
இந்நிலையில் போலீஸாா் சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகப்படும்படி வந்தவரைப் பிடித்து விசாரித்தனா். இகில் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், குழிப்பள்ளியைச் சோ்ந்த கோயா மகன் அலிகோயா (50) என்பதும், இவா் அம்மாபேட்டையில் 3 எருமைகளைத் திருடிச் சென்று, கேரள சந்தைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அலிகோயாவை போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.