FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வேனில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பெருந்துறை அருகே, வேனில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சென்னியப்பன் மகன் வடிவேல் (49). தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா். இவரின் மனைவி ரம்யா (33) கணவா் ஓட்டும் வேனில் உதவியாளராக உள்ளாா். இவா்களின் மகன் ஹரிஹரன் (15) திண்டல் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், தனது தந்தையுடன் பள்ளி வேனில் சென்றாா். வேன் வேப்பம்பாளையம் அருகில் வளைவில் திரும்பியபோது நிலைதடுமாறி ஹரிஹரன் கீழே சாலையில் விழுந்ததில் அவா் மீது வேன் ஏறியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments