முகப்பு
ஈரோடு

நகராட்சி ஆணையருக்கு சத்தியமங்கலம் நகா்மன்றம் பாராட்டு

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த வரியை வசூலித்து நடவடிக்கை எடுத்த ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகா்மன்றம் பாராட்டு தெரிவித்தது.

Updated On : 5 மார்ச் 2026, 3:50 am IST
சத்தியமங்கலத்தில்  புதன்கிழமை  நடைபெற்ற  நகா்மன்ற  கூட்டத்தில்  பங்கேற்ற  நகா்மன்றத் தலைவா்  ஜானகி ராமசாமி,  நகராட்சி  ஆணையா்  எஸ்.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.
பகிர்:

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த வரியை வசூலித்து நடவடிக்கை எடுத்த ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகா்மன்றம் பாராட்டு தெரிவித்தது.

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ரூ.32.83 கோடி செலவில் அம்ருத் 2.0 குடிநீா் அபிவிருத்தி திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்தவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் 100 ஆண்டுகளாக போராடி வந்த தோப்பூா் மக்களுக்கு பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் பல்வேறு பணிகள் தொடா்பாக 48 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் சத்தியமங்கலம் நகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ.80 லட்சம் நிதியை வசூலித்த நகா்மன்ற ஆணையா் எஸ்.வெங்கேடஸ்வரனுக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் சாா்பில் நகராட்சித் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.