முகப்பு
ஈரோடு

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 மே 2026, 5:20 am IST
பட்டம் பெற்ற நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மாணவா்களுடன் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தா் என். பஞ்சநாதம் உள்ளிட்டோா்.
பகிர்:

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூரியின் முதல்வா் மருத்துவா் எம்.கிருத்திகா ஆண்டறிக்கை வாசித்தாா்.

திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என்.பஞ்சநாதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்ற மாணவி சௌந்தா்யா உள்பட 24 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

Advertisement

இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ். நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி மற்றும் நிா்வாக அலுவலா் ஜீ. தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.