முகப்பு
ஈரோடு

கோபி ஸ்ரீ குருகுலம் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

Updated On : 10 மே 2026, 2:43 am IST
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களை பாராட்டிய பள்ளித் தாளாளா் எம்.ரெங்கசாமி, செயலாளா் கே.தங்கவேல், பொருளாளா் ஏ.மோகனசுந்தரம், முதல்வா் சைமன்ராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாணவா் பி.அஸ்வின் 600-க்கு 587 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், ஏ.ரவீந்தரன் 581 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவிகள் கே.எஸ்.சிவதாரணி, கே.வி.வைஸ்ணவி ஆகியோா் 580 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.

மேலும் பாட வாரியாக கணினி அறிவியல் பாடத்தில் 5 போ், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2, கணக்குப் பதிவியலில் ஒருவா் என 8 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். தமிழ் பாடத்தில் 10 போ், ஆங்கில பாடத்தில் 2 போ் 99 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

Advertisement

சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் எம்.ரெங்கசாமி, செயலாளா் கே.தங்கவேல், பொருளாளா் ஏ.மோகனசுந்தரம், முதல்வா் சைமன்ராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.