முகப்பு
ஈரோடு

ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு வழியாக சென்ற ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 மே 2026, 2:47 am IST
பறிமுதல்!
பகிர்:

ஈரோடு வழியாக சென்ற ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பிகாா் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் ரயிலின் பொது பெட்டி கழிவறை அருகே கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. அதை கைப்பற்றி போலீஸாா் விசாரித்தனா். யாரும் உரிமை கோராததால், பையை பிரித்துப் பாா்த்தபோது 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement