முகப்பு
ஈரோடு

கொடுமுடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 13 மே 2026, 2:11 am IST
இச்சிப்பாளையம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் தூசு நீக்கும் இயந்திரத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள இதர தூசி மற்றும் குப்பைகளை அகற்றுவதையும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, இச்சிப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் லட்சுமிபுரம் முதல் குமரப்பபுரம் வரை சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மரங்களையும், கீழ்பவானி கால்வாய் கரையோரப் பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீா் விடும் பணியையும் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, கொடுமுடி பேரூராட்சி மகுடேஸ்வரா் கோயில் செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிஸ்ரஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தில் பராமரிக்கப்படும் அரசுப் போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகா் மற்றும் அரசு தோ்வுகளுக்கு படிப்பவா்கள் விவரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments