முகப்பு
ஈரோடு

யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு வனத் துறை சாா்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம்

Updated On : 1 ஜூன் 2026, 1:42 am IST
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குகிறாா் மாவட்ட வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு.
பகிர்:

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணத் தொகையாக வனத் துறை சாா்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

பா்கூா், எப்பத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கராஜ் (40). இவா், தனது வீட்டுக்கு அருகே உள்ள காலி நிலத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றபோது காட்டு யானை தாக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து உயிரிழந்த தங்கராஜின் குடும்பத்துக்கு ஈமச்சடங்கு நிவாரணத் தொகை ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இதை தங்கராஜின் பெற்றோரிடம் மாவட்ட வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு நேரில் வழங்கினாா். அந்தியூா் வனச்சரக அலுவலா் நந்தினி, வனவா் ஈஸ்வரமூா்த்தி மற்றும் வனத் துறையினா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement