முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் சிறுமி படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கூடலூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஷ்மீர் சிறுமி படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கூடலூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் சாதிக் பாபு தலைமை வகித்தார். நகரத் தலைவர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி என்.வாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் க.சகாதேவன், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் கேதீஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலாளர் தம்பி ராமசாமி, திமுக ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். நிசார் அகமது நன்றி கூறினார்.