மனித- வன விலங்கு மோதல் தடுப்புக் குறித்த விழிப்புணர்வு
கூடலூரை அடுத்துள்ள பிதர்க்காடு வனச் சரகம் சார்பில் மனித-வன விலங்கு மோதலைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கூடலூரை அடுத்துள்ள பிதர்க்காடு வனச் சரகம் சார்பில் மனித-வன விலங்கு மோதலைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கூடலூர் வனக் கோட்டத்திலுள்ள பிதர்க்காடு வனச் சரகம் கொட்டாடு கிராமத்தில் வனத் துறை சார்பில் மனித- வன விலங்கு மோதலைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வனச் சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வகித்தார்.
இது குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. வனக் காவலர்கள் ஜம்புலிங்கம், மோகன்ராஜ், வன ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.