மஞ்சூர் பகுதியில் அபாயகரமான மரங்கள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
மஞ்சூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் அகற்றுவதற்கான கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
மஞ்சூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் அகற்றுவதற்கான கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
மஞ்சூரில் இருந்து உதகை, குன்னூர், கோரகுந்தா, மேல்பவானி, கிண்ணக்கொரை, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பட்டுப் போய் காணப்படுகின்றன. இதனால், காற்று, மழைக் காலங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் வாடிக்கையாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் கிண்ணக்கொரை, குந்தாபாலம், கோரகுந்தா, மேல்பவானி, சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து மஞ்சூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்களில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்கள் குறித்து ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குந்தா வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மஞ்சூர்-உதகை சாலையில் குந்தா பாலம் பகுதியில் ஆபத்தான மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குந்தா பாலம் முதல் கைகாட்டி வரையிலான 100-க்கு மேற்பட்ட மரங்கள் அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.