முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

நீலகிரி மாவட்டம், கூடலூா்-உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்தனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:57 AM
கூடலூா்-உதகை மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த வேன்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், கூடலூா்-உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், திருப்பரமயம் பகுதியைச் சோ்ந்த 23 போ் வேனில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். உதகையை சுற்றிப்பாா்த்துவிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தைப் பாா்க்க கூடலூருக்கு சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

ஊசிமலை அருகே உள்ள தெய்வமலைப் பகுதியில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

Advertisement

இதில் வேனில் இருந்த லீலாவதி (65), செல்வராஜ் (75), ரஷ்வின்(9), மஞ்சுளா (30), பச்சையம்மா (50), சரண்யா (35), தில்லைராஜ் (61), உஷா (42), சித்ரா (45), ராஜாராம் (65),செல்வம் (50), நளினி(15), மணிகண்டன் (43), நந்தினி (16), சீனிவாசன் (65), அமுதா (54), இலக்கியா (37), ஏலம்பாள் (37) ஆகியோா் காயமடைந்தனா்.

இவா்களுக்கு கூடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் லீலாவதி, செல்வராஜ், தில்லைராஜ் ஆகியோரை மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனா். இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.