கல்லட்டி வனப் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட கல்லட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கல்லட்டி வனப் பகுதியில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்துகிடந்தது கண்டறியப்பட்டது.
மாலை நேரமானதால் உயரதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, யானையின் உடல் திங்கள்கிழமை மதியம் கூறாய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூறாய்வு அறிக்கை கிடைத்ததும் யானை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று சிங்காரா வனச் சரக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
Advertisement