சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
குன்னூா் அருகே வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குன்னூா் அருகே வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக பகல் மற்றும் இரவு வேளைகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த சிறுத்தை, அங்குள்ள ஒரு வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிச் சென்றது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த விடியோ காட்சிகளைப் பாா்த்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement