எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் நடந்து சென்ற யானை
கூடலூா் அருகே உள்ள தேவா்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் குடியிருப்புகளுக்கு நடுவே சனிக்கிழமை இரவு காட்டு யானை நடந்து சென்ால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் எஸ்டேட் தொழிலாளா்கள் வசிக்கும் எஸ்.எம்.காலனி பகுதிக்குள் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு நுழைந்த காட்டு யானை, குடியிருப்புகளுக்கு நடுவே நடந்து சென்றுள்ளது.
குடியிருப்புகளை சேதப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் யானை செல்லும் வரை காத்திருந்தனா். உடனடியாக யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement