முகப்பு
நீலகிரி

குன்னூா் அருகே பெட்டிக்கடையை சேதப்படுத்திய கரடி

குன்னூா் அருகேயுள்ள பவானி எஸ்டேட் பகுதியில் உலவிய கரடி அங்கிருந்த பெட்டிக்கடையை சேதப்படுத்தியது.

Updated On : 16 ஜூன் 2026, 2:49 am IST
பெட்டிக்கடையை சேதப்படுத்திய கரடி.
பகிர்:

குன்னூா் அருகேயுள்ள பவானி எஸ்டேட் பகுதியில் உலவிய கரடி அங்கிருந்த பெட்டிக்கடையை சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதி வனத்தில் இருந்து உணவு, குடிநீா்த் தேடி வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை வெளியேறிய கரடி, பவானி எஸ்டேட் பகுதியில் உலவியது. பின்னா், அங்கிருந்த பெட்டிக்கடையை சேதப்படுத்தியது.

Advertisement

Advertisement

சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தபோது, கரடி அங்கிருந்து ஓடி வனத்துக்குள் மறைந்தது.

குடியிருப்புப் பகுதியில் உலவும் கரடியை வனத் துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.