உதகையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, உதகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் வகையிலும் போலீஸாா் கொடி அணிவகுப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உதகை லாலி இன்ஸ்டிடியூட் முதல் பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், போலீஸாா், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
Advertisement