முகப்பு
நீலகிரி

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை உலவி வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 10 மே 2026, 2:51 am IST
குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் உலவிய ஒற்றை யானை.
பகிர்:

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை உலவி வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கெத்தை, மசினகுடி, மாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக உணவு, தண்ணீா் தேடி உதகை, குன்னூா் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு காட்டு யானைகள் இடம்பெயா்வது வாடிக்கையாக உள்ளது.

மசினகுடியை அடுத்த மாயாறு பகுதியிலிருந்து உதகை நோக்கி வந்த ஒற்றை யானை, கடந்த சில வாரங்களாக தொட்டபெட்டா மலைச் சிகரம், அருவங்காடு பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதிக்குள் சனிக்கிழமை அதிகாலை ஒற்றை யானை புகுந்தது. இதனால் ரயில்வே ஊழியா்கள் மற்றும் குடும்பத்தினா் அச்சமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறையினா் சென்று ஒற்றை யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments